கரோனா வைரஸ் உருவானது எங்கே? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

0
75
Corona Virus-News4 Tamil Latest World News in Tamil
Corona Virus-News4 Tamil Latest World News in Tamil

கரோனா வைரஸ் உருவானது எங்கே? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸ்சுக்கு இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர். 2000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டின் பயோ- வெப்பன் தயாரிக்கும் ஆய்வுக்கூடத்தில் இந்த வைரஸ் உருவாகி இருக்கலாம் என செய்திகள் வந்துள்ளது.

இந்த செய்தி “தி வாஷி்ங்டன் டைமஸ்” பத்திரிகைக்கு இஸ்ரேலைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தெரிவித்து உள்ளார். அதாவது உலகிற்கு தெரியாமல் சீன கிருமிகளை உருவாக்கி வருவதாகவும் , மனிதர்களை கொல்லும் பயோ- வெப்பன் ஆய்வுக்கூடத்தை வுஹன் மாநிலத்தில் அமைந்துள்ளது. அங்கு இருந்து பரவி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ ராணுவத்தின் புலன் ஆய்வு பிரிவின் முன்னாள் அதிகாரியும், பயோ ஆயுதங்கள் போன்றவை குறித்து அறிந்தவருமான தேனி ஷேஹம் வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகையில் பேட்டி அளித்தார். அதில் அவர , சீனாவின் வுஹான் நகரில் பயோ ஆயுதங்கள் உருவாக்கும் ஆய்வு கூடத்தை 2015 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகின்றன.

corona virus
corona virus

அந்த நகரில் மட்டும் தான் ஆபத்தான கிருமிகள் குறித்து ஆய்வு செய்யும் வகையில் ஆய்வகங்கள் உருவாக்கி நடத்தி வந்தனர். இந்த ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்படும் கிருமிகள் மனிதர்களை கொல்லும் ஆற்றல் மிக்கது என்று அவர் தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த வித விதமான ஆதாரங்களும் தெளிவாக இல்லை. இந்த குற்றச்சாட்டுக்களை சீனா மறுக்கிறது.

சீனாவின் வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் முதன் முதலாக பரவியுள்ளது. சீனாவில் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Parthipan K