தமிழகத்தில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா

0
51

தமிழகத்தில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா

தமிழகத்தில் நேற்று வரை 67 பேர் கொரோனாவால் பாதித்திருந்த நிலையில் தற்போது கொரோனா பாதி்த்தோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் நிஜாமுதீனில் நடைபெற்ற தாய்லாந்து நாட்டினர் நடத்திய மத நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

1500 பேர் கலந்துக் கொண்ட இந்த மாநாட்டில் 981 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளோரைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சுகாதாரத்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரத்தில் 3 பேரும் மதுரையில் 2 பேரும் திருவண்ணாமலை மற்றும் சென்னையில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது.

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here