தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கொரோனா பாதிப்பு

0
75
corona virus
corona virus

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கொரோனா பாதிப்பு

இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. முதல்வர் அவர்கள் டெல்லி மாநாட்டில் 1131 பேர் பங்கேற்றுள்ளனர் என்றும் அதில் 515பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் கூறியுள்ளார்.

இன்று புதுச்சேரியில் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இருவவருக்கு நோய்த்தொற்று இருப்பதுக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் டெல்லி மாநாட்டிற்குச் சென்றவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால் அந்தப் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் ராசிபுரத்தில் பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 4பேருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் 17பேருக்கும் கும்பகோணத்தில் 12பேருக்கும் ஈரோட்டில் மூவருக்கும் ராசிபுரத்தில் 8 பேருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவர்களில் பலர் டெல்லி மாநாட்டிற்குச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K