சென்னையில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதித்த 21 பேர் மரணம்!

0
69

தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் கொரோனா பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நோயின் தாக்கம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் உயர்ந்தே வருகிறது.

இதனால் இந்த நான்கு மாவட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கினால் சென்னைவாசிகள் பாதுகாப்பு இன்மை, வேலையிழப்பு, வியாபார நஷ்டம் மற்றும் வருமானமில்லாத கடுமையான பொருளாதார சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்து 21 பேர் ஒரே நாளில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 5 பேர் மரணம், மேலும் கொரோனா பாதிப்பிற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் இறந்துள்ளனர்.

சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் 3 முதியவர்கள் இறந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 70 வயது முதியவர் பலியானார். கொரோனா பாதிப்பால் சென்னை பகுதியில் உயிரிழப்பு அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

author avatar
Jayachandiran