குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே டாஸ்மாக்.! இத்தனை டோக்கன் மட்டுமே வழங்கப்படும்!!

0
97

தமிழகத்தில் இன்று முதல் சில விதுமுறைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகம் பாதிப்பான சென்னை மாநகர பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாநகர பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. மேலும் பொழுதுபோக்கு இடமான மால்கள், வணிக வளாகங்கள், கொரோனா சோதனை மையங்களுக்கு அருகில் இருக்கும் மதுக்கடைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மதுபானக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 500 டோக்கன் மட்டுமே வழங்க வேண்டும் என்று புதிய விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. இந்த டோக்கன்கள் ஏழு வண்ணங்களில் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் மதுபான கடைகளுக்கு வரும் மதுபான பிரியர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று மட்டுமே 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

author avatar
Jayachandiran