நாளை முதல் குடும்ப அட்டைக்கான 1000 ரூபாய் வழங்கப்படும்! -தமிழக அரசு

0
70

நாளை முதல் குடும்ப அட்டைக்கான 1000 ரூபாய் வழங்கப்படும்! -தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் அட்டைகளுக்கான ரொக்கப்பணம் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்களான எண்ணெய், பருப்பு, சர்க்கரை, கோதுமை ஆகிய பொருட்கள் நாளை (02.04.20) நியாயவிலை கடைகளில் கிடைக்கும் என்று அரச சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பொது வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கியதோடு, வேலை மற்றும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து ஏப்ரல் மாதத்திற்கு வழங்க வேண்டிய அரிசி, எண்ணெய், பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நாளை முதல் பணம் மற்றும் இலவச பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக குடும்ப அட்டையை 1 கோடியே 88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக 1,882 கோடியே 90 லட்சத்து
73 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது சரியான முறையில் கணக்கிடப்பட்டு தமிழ்நாடு நுகவர்வு பொருள் வாணிப கழகத்தின் மூலம் மாநில தலைமை கூட்டுறவு வங்கி கணக்கின் வழியாக செலுத்தப்பட்டுள்ளது.

இலவச பொருட்களை வாங்க மக்கள் குவிந்து விட வாய்ப்பு இருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு அரசு கடுமையான விதிமுறை விதித்துள்ளது. ஆகையால் தினசரி 70 முதல் 100 ரேசன் அட்டைகளுக்கு மட்டுமே 1,000 பணமும் ஏப்ரல் மாத இலவச பொருட்களும் வழங்கப்பட உள்ளது. பொருட்களை வழங்க அனைத்து ரேசன்கடைகளிலும் பட்டியல் முறையில் வழங்க உள்ளனர். மேலும் ஒரே நேரத்தில் அதிகம் பேர் வந்தால் டோக்கன் முறையில் நேரம் ஒதுக்கப்பட்டு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Jayachandiran