இறந்த மருத்துவரை புதைக்க கிறித்தவர்கள் எதிர்ப்பு! எங்கே போனது மனிதநேயம்! தடுத்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாயுமா.?

0
94

இறந்த மருத்துவரை புதைக்க கிறித்தவர்கள் எதிர்ப்பு! எங்கே போனது மனிதநேயம்! தடுத்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாயுமா.?

கொரோனாவால் பாதித்து உயிரிழந்த மருத்துவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நரம்பயில் நிபுணர் மற்றும் 30 வருடங்களாக மக்களுக்கு மருத்துவ சேவை செய்த டாக்டர் சைமன் ஹெர்குலஸ் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலை அடக்க செய்ய நேற்று முன்தினம் கீழ்பாக்கத்தில் உள்ள இடுகாட்டிற்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். அப்போது அங்கிருந்த சிலர் மருத்துவரின் உடலை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதன்பிறகு வேறொரு மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறந்த மருத்துவர் சைமன் அவர்கள் ஒரு கிறித்தவர் மட்டுமல்லாமல் அவரை புதைக்க சென்ற இடமும் ஆர்.சி என்னும் இறந்த கிறித்தவர்கள் புதைக்கப்படும் இடமாகும். மருத்துவரின் உடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது வேறு யாருமில்லை, அதே இயேசுவை வழிபடும் கிறித்தவர்கள்தான் என்ற உண்மை வெளியாகியுள்ளது. உலகமே கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காக பல்வேறு முயற்சிகளை ஒற்றுமை உணர்வோடு மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் துளியும் மனிதநேயம் இல்லாமல் நடந்துகொண்ட கிறித்தவர்களை ஆண்டவன் இயேசுவே தண்டிப்பார் என்று நடுநிலை கிறித்தவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கிறித்தவர்களின் தவறை மறைத்து பொதுமக்கள் என்று உண்மையை பூசி மொழிகியதாக தகவல்கள் கூறப்படுகிறது
மனிதாபிமானம் இல்லாமல் ஒரே சமயத்தை சேர்ந்த ஆர்.சி மற்றும் பெந்தகோஸ்தே கிறித்தவர்களே இப்படி நடந்து கொண்டதை மறைத்து பொத்தாம் பொதுவாக செய்தியை வெளியிடுவதாக சமூக வலைதளத்தில் கருத்து விவாதமும் நடந்து வருகிறது.
இந்நிலையில் மருத்துவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Jayachandiran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here