மாஸ்க் அணிந்தால் மட்டுமே பேருந்தில் அனுமதி! மே 4க்கு பிறகு செய்ய வேண்டிய நடைமுறைகள்! சென்னை மாநகராட்சி அதிரடி!

0
135

மாஸ்க் அணிந்தால் மட்டுமே பேருந்தில் அனுமதி! மே 4க்கு பிறகு செய்ய வேண்டிய நடைமுறைகள்! சென்னை மாநகராட்சி அதிரடி!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு யாரும் வெளியே வரக்கூடாது என்று நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. இருப்பினும் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்ற காணத்தால் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக அரசு கூறியது. பின்னர் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக மோடி அறிவித்தார்.

இதே சமயத்தில் சிறுதொழில்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள், மாநில மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு விதிகள் தளர்த்தப்பட்டு ஏப்ரல் 20 இருந்து செயல்படலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
மேலும் மாநில அரசுகள் அவரவர் பகுதிகளில் எந்தெந்த நிறுவனங்களுக்கு ஊரடங்கு தளர்வு அளிக்கலாம் என்பதை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதன்பிறகும் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும் என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் மே 3 ஆம் தேதிக்கு பிறகு போக்குவரத்து இயக்கப்படவுள்ளது. இதற்கு பின் சென்னை போக்குவரத்து பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

  • மே 4 ஆம் தேதி முதல் மாநகர போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வேலைக்கு வர வேண்டும்.
  • மணிக்கு ஒருமுறை தங்களது கைகளை சோப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகள் முக கவசம் இல்லாமல் ஏறினால் அனுமதிக்க கூடாது.
  • பேருந்தை இயக்கும் போது காய்ச்சலோ அல்லது கொரோனா தொற்றோ இருந்தால் அப்பணியாளர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பணியில் இருக்கும் ஊழியர்கள் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
    ஆரோக்கிய சேது என்ற செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.
  • சமூக இடைவெளியை பராமரித்து பயணிகள் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Jayachandiran