குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா! உலகம் முழுவதும் 1.70 லட்சம் உயிரிழப்பு!

0
98

குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா! உலகம் முழுவதும் 1.70 லட்சம் உயிரிழப்பு!

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அங்கு ராஷ்டிரபதிபவனில் இருக்கும் 125 குடும்ப உறுப்பினர்களும் தனிமைபடுத்தியுள்ளனர்.

சீனாவில் உருவான கொரோனா பாதிப்பு உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு பரவி மனித உயிர்களை கொத்து கொத்தாக சூரையாடியது. இதனால் உலகத்தின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிழந்தோர் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 2,842 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.70 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் இருந்து 6 லட்சத்து 46 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும் 56,766 பேர் கவலைக்கிடமான நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட இந்த பாதிப்பினால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்சு, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதித்துள்ளது.

author avatar
Jayachandiran