கொரோனா நிவாரணம் 1000 வேண்டாம் என்பவர்கள் இணையத்தில் தெரிவிக்கலாம்! – தமிழக அரசு

0
94

கொரோனா நிவாரணம் 1000 வேண்டாம் என்பவர்கள் இணையத்தில் தெரிவிக்கலாம்!
– தமிழக அரசு

கொரோனா நிவாரண தொகை வேண்டாம் என்பவர்கள் இணையத்தில் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கூறினார். இதனோடு ஏப்ரல் மாதத்திற்கு தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்கள் உட்பட  இலவசமாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளுக்கான ரூ.1,000 கொரோனா நிவாரண நிதி நேற்று முதல் சிறப்பு டோக்கன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு ரேசன் கடைகளில் இடைவெளி விட்டு நிவாரண தொகையை மக்கள் வாங்கிச் சென்றனர். இந்த நிவாரண உதவி பொருட்கள் வருகின்ற 15 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில்; தமிழக அரசு அறிவித்திருக்கும் 1000 ரூபாய் நிவாரண உதவித் தொகை மற்றும்  இலவசமான உணவுப்பொருட்களை வாங்க விருப்பமில்லாதவர்கள் tnpds.gov.in என்ற இணைய முகவரி மற்றும் tnpds. என்ற அப்ளிகேசனிலும் சென்று தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம் என்றும், இது ஏப்ரல் மாதத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று கூறியுள்ளது. இதனால் நிவாரண பொருட்களை வாங்க விருப்பம் இல்லாதவர்கள் இதில் பதிவு செய்ய தொடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Jayachandiran