எஸ்பிபி-விற்கு தற்போது எடுத்த கொரோனா டெஸ்ட் ரிசல்ட்! துள்ளிக் குதித்த ரசிகர்கள்!

0
60

கடந்த மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தற்போது கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்துதாக அவருடைய மகன் சரண் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிர் காக்கும் உபகரணங்கள் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர்  போன்ற சிகிச்சைகளை மேற்கொண்டார்.

அதன்பின் உடல் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி தற்போது இறுதியாக எடுத்த  கொரோனா பரிசோதனைக்குப் பிறகு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக தெரிகிறது.

அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் தொற்றிலிருந்து பிசியோதெரபி சிகிச்சையின் வாயிலாக கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு, தான் பேச நினைப்பதை எழுதிக் காட்டும் அளவிற்கு முன்னேறி உள்ளார்.

அது மட்டும் அதுமட்டுமில்லாமல் கிரிக்கெட் போன்ற ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பதாகவும் எஸ்.பி.பி-யின் மகன் சரண் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

author avatar
Parthipan K