தமிழகத்தில் ஆக்ரோசமாக பரவும் கொரோனா பாதிப்பு!! அலட்சியம் காட்டும் மக்கள்!!அதிகரிக்கும் உயிழப்பு!!

0
65
Corona spreads aggressively in Tamil Nadu !! Indifferent people !! Increasing death toll !!
Corona spreads aggressively in Tamil Nadu !! Indifferent people !! Increasing death toll !!

தமிழகத்தில் ஆக்ரோசமாக பரவும் கொரோனா பாதிப்பு!! அலட்சியம் காட்டும் மக்கள்!!அதிகரிக்கும் உயிரிழப்பு!!

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தொடர்ந்து உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தமிழகம் மட்டும் விதிவிலக்கில்லை. நேற்று ஒரே நாளில் புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.நேற்று மட்டும் ஒரே நாளில் 20952 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,28,064 ஆக அதிகரித்துள்ளது. இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,016 பேர். தமிழகத்தில் மொத்தம் 10,90,338 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 122 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே மொத்த பலி எண்ணிக்கை 14,468 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை   6150 பேர். இதுவரை மொத்தம் 352260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4858 ஆக உயர்ந்துள்ளது.செங்கல்பட்டில் இன்று 1618 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 84638 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 74405 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  பலி எண்ணிக்கை 976 பேர் ஆக உள்ளது.கோவையில் இன்று ஒரே நாளில் 1566 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82689 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 73772 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பலி எண்ணிக்கை 729 பேர் ஆக உள்ளது.

தமிழகத்தில் தற்போது 1,23,258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் மக்களில் பலர் அட்சியமாக இருபது வருத்தத்தை அளிக்கிறது. இந்த மோசமான நிலைமையை கட்ட்டுகுள் கொண்டுவரும் பொறுப்பு மக்கள் ஒவ்வொருடையதாகும். எனவே மக்கள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பருமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

author avatar
CineDesk