ராகவா லாரன்ஸ் நடத்தும் விடுதியில் கொரோனா தொற்று

0
72

பிரபல நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

சமூக சேவை மீது பெரும் ஆர்வம் கொண்டவர் சொந்தமாக அறக்கட்டளை நிறுவி குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு விடுது நடத்தி வருகிறார். தனது சொந்த செலவில் ஏழை குழந்தைகளுக்கு மருத்து உதவி மற்றும் இருதய அறுவை சிகிச்சைகளை செய்துள்ளவர் பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

சென்னை வெள்ளம் முதல் தற்போது கொரோனா பாதிப்பு வரை பல பாதிப்புகளுக்கு தாமாக முன்வந்து கோடிக் கணக்கில் அரசுக்கு நிவாரண உதவியளித்துள்ளார்.

இவர் நடத்தி வரும் விடுதியில் அங்கு பணிபுரியும் பணி பெண்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பாதிப்படைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் தனியார் கல்லூரியில் தனிமைப்பப்டுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K