தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம்! குறையும் பாதிப்பு எண்ணிக்கை

0
64
Kodambakkam Reached Highest Corona Infection Rate in Chennai-News4 Tamil Online Tamil News
Kodambakkam Reached Highest Corona Infection Rate in Chennai-News4 Tamil Online Tamil News

தமிழகத்தில் இன்று மட்டுமே 434 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக தற்போது வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10108 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தினமும் 500 க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் சமீபத்தில் சில நாட்களாக தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களில் 500 க்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 9674 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 434 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்று வரை ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10108 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு சற்றே குறைந்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 310 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 21 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 20 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 11 நபர்களுக்கும், மதுரையில் 11 நபர்களுக்கும், திருநெல்வேலியில் 22 நபர்களுக்கும், தூத்துக்குடியில் 10 நபர்களுக்கும், கன்னியாகுமரியில் 4 நபர்களுக்கும், கடலூரில் 3 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூரில் 2 நபர்களுக்கும், தென்காசியில் 2 நபர்களுக்கும், தஞ்சாவூர் மற்றும் விருதுநகரில் தலா ஒருவருக்கும், திருவண்ணாமலையில் 3 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வெள்ளிக்கிழமையான இன்று மட்டும் 359 நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலமாக ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மே 15 ஆம் தேதி நிலவரப்படி 2599 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 7436 நபர்கள் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்று மட்டும் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் தற்போது வரை கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 71 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று உயிரிழந்த 5 நபர்களில் 3 நபர்களுக்கு கிட்னி பிரச்சனை இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.