தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் பற்றிய புதிய தகவல்

0
83

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் பற்றிய புதிய தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக நாளுக்கு நாள் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தமிழகத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 1755 ஆக உயர்ந்துள்ளது.   

கொரோனா பாதிப்பால்  இன்று கொரோனா பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 22 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் குறிப்பாக சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 52 பேருக்கு புதிதாக கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது வரை சென்னையில் மட்டும் கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 452 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையானது  822 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
Ammasi Manickam