பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
96
Corona infection confirmed for the first time! Party leadership in shock!
Corona infection confirmed for the first time! Party leadership in shock!

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கொரோனா தொற்றானது முடிவடைந்த நிலையில் அனைத்து துறைகளும் தற்பொழுது தான் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி இயங்க ஆரம்பித்தது.இருப்பினும் அத்தொற்று மக்களை விடாமல் முதல் அலை இரண்டாம் அலை என்று உரு மாறி பரவிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது கரோனோ தொற்றானது ஒமைக்ரானாக உரு மாற்றம் அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஒமைக்ரான் தொற்றானது கொரோனா தொற்றைவிட 100 மடங்கு அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது.

அதேசமயம் டெல்டா வகை கொரோனவை விட இதன் தாக்கம் சற்று குறைந்தே காணப்படும் என்று கூறுகின்றனர். இது தென் ஆப்பிரிக்கா நாட்டில் உருமாறி தற்போது அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. அந்தவகையில் முதலில் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளிநாடு சென்று வந்தவருக்கு இத்தொற்று உறுதியானது. அதனையடுத்து அனைத்து மாநிலங்களிலும் தற்போது அதிவேகத்தில் பரவி வருகிறது. அந்தவகையில் பாமர மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் ,அரசியல்வாதிகள் என அனைவரும் இத்தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் மிகவும் பிரபலமான இந்தி நடிகர் தான், ஜான் ஆப்ரகாம்.பாலிவுட் திரைத்துறையில் இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் முதலில் மாடலாக வலம் வந்தார்.

அதனையடுத்து ஜிஸ்ம் என்ற படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால் மக்களை வெகுவாக கவர்ந்தார். அதனையடுத்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் 2014ஆம் ஆண்டு பிரியா ரஞ்சல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்பொழுது ஜான் ஆபிரகாம் மற்றும் பிரியா ரஞ்சல் ஆகியோருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது. இருவரும் அவரது வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இது ஓமைக்ரானக இருக்குமா என்பது குறித்து தெரியவரும் என்றும் கூறுகின்றனர்.மேலும் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.