நாட்டில் மறுபடியும் அதிகரிக்கத் தொடங்கிய நோய் தொற்று பாதிப்பு!

0
105

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற புள்ளிவிவரத்தினடிப்படையில் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 15,754 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,220பேர் நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.

இதுவரையிலும் ஒட்டுமொத்தமாக 4,36,85,535 பெயர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இன்று மட்டும் 47 பேர் இந்த நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரையில் 5,27,253 பேர் இந்த நோய் தொற்றுக்கு பலியாகியிருக்கிறார்கள்.

நாடு முழுவதும் தற்போது 1,01,830 பேர் இந்த நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டில் இந்த நோய் தொற்று தினசரி சதவீதம் 3.47 எனவும், வாராந்திர சதவீதம் 3.90 ஆகவும், இருக்கிறது. இந்தியாவில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் சதவீதம் 98.58 சதவீதமாகவும், உயிரிழப்பு சதவீதம் 1.19 சதவீதமாகவும், இருக்கிறது.

தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாட்டில் இதுவரையில் 209.27 கோடி 93.90 கோடி 2வது தவணை தடுப்பூசி மற்றும் 13.18 கோடி முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 31,52,882 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.