பிரதமர் நிவாரண நிதிக்கு 1,125 கோடியை வழங்கும் பிரபல நிறுவனம்!

0
141

பிரதமர் நிவாரண நிதிக்கு 1,125 கோடியை வழங்கும் பிரபல நிறுவனம்!

இந்தியாவின் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மருத்துவ மற்றும் இதர அவசர தேவைகளுக்காக பிரதமர் மோடி மக்களிடம் நிவாரண நிதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து இந்திய தனியார் நிறுவனங்கள், சினிமா திரைப்பட நடிகர்,நடிகைகள் நாட்டிலுள்ள சிறுவர்கள் வரை நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அளவில் 1,500 கோடி ரூபாயை பிரபல மோட்டார் நிறுவனமான டாடா கம்பெனி அதிகபட்ச தொகையாக வழங்கியது. இதற்கு அடுத்தபடியாக அதிகபட்ச நிவாரண நிதியாக விப்ரோ நிறுவனம் 1,125 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து விப்ரோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது; அதில் இந்த தொகையானது கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஈடுபடும் நபர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தின் இயக்குனர் அசீம் பிரேம்ஜி அவர்கள் இந்த தொகையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

author avatar
Jayachandiran