தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 127 பேர் பலி.. மேலும் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

0
49

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,860 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 127 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5, 641 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இன்று மட்டும் 5,236 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் எண்ணிக்கை 2,72,251 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71,343 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,40,796 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3,509 பேர் ஆண்கள், 2,351 பேர் பெண்கள்.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 1,179 பேர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,15,444 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
Parthipan K