தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கரோனாவினால் பலி எண்ணிக்கை 4200ஐ கடந்தது!

0
66

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கரோனாவினால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றினால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கையும், நோயினால் பலியான மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளன.

 

தற்போது வெளியான அறிக்கையின் படி தமிழகத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 109 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

இதன் மூலம் இன்று வரை இறந்தவர்கள் எண்ணிக்கை 4241ஆக உயர்ந்துள்ளது.

 

மேலும் இன்று மட்டும் புதிதாக 5609 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரம் தொற்றுக்கள் ப ஏற்பட்டுள்ளன.

 

மேலும் கருணா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் பட்டியலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்று மட்டும் 5800 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 2,02,283 பேர் குணமடைந்துள்ளனர்.

author avatar
Parthipan K