டெல்லி திகார் சிறையில் குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை!!

0
134
#image_title

டெல்லி திகார் சிறையில் ஒரு குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை!!

டெல்லி மாளவியா நகரில் 2016 இல் நடந்த கொள்ளை வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் அவரை குற்றவாளி என தெரிவித்திருந்தது.

26 வயதான குற்றவாளி சிறை எண் 8-9 இல் அடைக்கப்பட்டார் . பொது கழிப்பறை பகுதியில் தூக்கிலிட்டு அவரே அவரது உயிரைப் பறித்துக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் மீது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லு தாஜ்பூரியாவின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த தற்கொலை சம்பவம் நடந்துள்ளது.

டெல்லி ரோகினி நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கேங்க்ஸ்டர் தாஜ்பூரியா, மே 2 அன்று திகார் சிறையில் போட்டி கும்பலால் கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டு பல போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Savitha