கீழே விழுந்த பழங்களை அப்படியே எடுத்து சென்று நோயாளிகளுக்கு கொடுத்த அதிகாரிகளின் செயலால் சர்ச்சை!!

0
121
#image_title

கீழே விழுந்த பழங்களை அப்படியே எடுத்து சென்று நோயாளிகளுக்கு கொடுத்த அதிகாரிகளின் செயலால் சர்ச்சை!!

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 வட மாநில தொழிலாளர்ளுக்கு தீக்காய சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், எஸ்.பி சுந்தரவதனம் ஆகியோருடன் வந்து பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள வட மாநில தொழிலாளர்களுக்கு வாங்கி வரப்பட்டதில் கீழே விழுந்த பழங்களை அப்படியே கூடையில் போட்டு எடுத்துச் சென்ற அதிகாரிகள் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Savitha