மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் தொடர் மர்மம்!?..மேலும் மூன்று பேர் கைது!.

0
95
Continuing mystery in student Smt. suicide case!?..Three more people arrested!.
Continuing mystery in student Smt. suicide case!?..Three more people arrested!.

மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் தொடர் மர்மம்!?..மேலும் மூன்று பேர் கைது!.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில்  பிளஸ் டூ வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது.தன் மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது.இதனால் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.மேலும் அங்குள்ள வாகனங்களுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.அப்பள்ளியில் உள்ள பொருட்கள் உட்பட பல பொருட்கள் அந்த தீயினால் கருகி சேதமடைந்தன.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி போராட்டம் வன்முறையாக வெடித்தது.இந்த போராட்டத்தை தூண்டியவர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றார்கள்.அதே போல இந்த விவகாரத்தில் அப்பள்ளியின் தாளாளர் மற்றும் செயலாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி  வன்முறையில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார்கள் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பலர் போலி தகவல்களை பரப்பி வருவதால் அவர்களையும் போலீசார்கள் கைது செய்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு  முன்பாக போலி ஆப் ஒன்றை உருவாக்கி அதில் நானூறு பேரை உறுப்பினராக சேர்த்து வன்முறையை தூண்டியதாக தொடர் வழக்கு பதிவு செய்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏர்வாய்பட்டினம் கிராமத்தை சேர்ந்த பதினேழு வயது சிறுவன் உட்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.இதன் மூலம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது.இச்சம்பவம் மக்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
Parthipan K