சேலம் அரசு பள்ளி ஆசிரியர் பாடம் நடத்தாமல் அந்த மாதிரி இருந்ததாக புகார்! சிஇஓ அதிகாரிகளின் உத்தரவு!

0
109
Complaint that government school teachers in Salem did not conduct lessons like that! The order of the CEO officers!
Complaint that government school teachers in Salem did not conduct lessons like that! The order of the CEO officers!

சேலம் அரசு பள்ளி ஆசிரியர் பாடம் நடத்தாமல் அந்த மாதிரி இருந்ததாக புகார்! சிஇஓ அதிகாரிகளின் உத்தரவு!

சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிபவர் செந்தில்குமார்.இவர் பாடம் நடத்தாமல் மெத்தனமாக இருந்ததாக புகார்கள் எழுந்து வருகின்றது.இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் எருமாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு செல்லும் பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் நடத்தாமல் இருந்து வருகிறார் என புகார் எழுந்து வந்ததை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கேட்ட போது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி வெளியாட்களை அழைத்து வந்து மிரட்டல் விடுத்துள்ளார்.இதனால் சிஇஓ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின்  பேரில் பள்ளிக்கு நேரடியாக சென்று சிஇஓ முருகன் விசாரணை நடத்தினார்.அந்த விசாரணையின் முடிவில் கணித பட்டதாரி ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்

author avatar
Parthipan K