மனைவியுடன் பேச்சு! மரியாதை போச்சு! சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்த கணவன்?

0
193

மனைவியுடன் பேச்சு! மரியாதை போச்சு! சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்த கணவன்?

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் தனது மனைவியுடன் சப்-இன்ஸ்பெக்டர் அடிக்கடி பேசி வருவதாகவும் எதிர்த்து கேள்விகேட்டதால் தன்னை தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார்.

வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த ஜனார்த்தனன் ராயலா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் “ராயலா நகர் காவல் நிலையத்தில்
சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் என்பவர் தனது மனைவியுடன் அடிக்கடி பேசி வருகிறார். நேற்று சாலையில் சென்ற போது தனது மனைவியும் சப்-இன்ஸ்பெக்டரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன்.

இந்நிலையில், ராஜேஷ் வீட்டிற்கு சென்று தனது மனைவியுடன் இருந்த புகைப்படத்துடன் அவரது குடும்பத்தினரிடம் முறையிட்டபோது ராஜேஷ் என்னை கடுமையாக தாக்கினார் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தரப்பில் இது உண்மையல்ல என்றும் தன் மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்துவதாக புகார் அளிக்கப்பட்டது. இருவரின் புகாரையும் பெற்றுக்கொண்ட ராயலா நகர் இன்ஸ்பெக்டர் தாம்சம் சேவியர் இருதரப்பிலும் விசாரணை நடத்தி வருகிறார்.

author avatar
Jayachandiran