தலித் என்பதால் கொலை குற்றவாளியை கூட ஆதரிக்குமா கம்யூனிஸ்ட் கட்சி?

0
90

தலித் என்பதால் கொலை குற்றவாளியை கூட ஆதரிக்குமா கம்யூனிஸ்ட் கட்சி?

கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட மாணவி திலகவதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷின் வாக்குமூலம் அளித்த வீடியோவை காவல் துறை வெளியிட்டது ஏன்?  என போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து அந்த இளைஞரை ஆதரிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் தன்னை காதலிக்க மறுத்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். காதலிக்க மறுத்ததற்காக மட்டுமே அந்த அப்பாவிப் பெண்ணை அந்த இளைஞர் கொலை செய்திருப்பது தெளிவாக தெரிகிறது.  

இந்நிலையில் கொலையாளி ஆகாஷை கைது செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட திலகவதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படும் ஆகாஷ் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதாலும் காவல் துறையில் உள்ள சிலர் கொலை குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுவதாக சந்தேகம் இருப்பதாலும் அப்பகுதியில் சாதிய மோதல் ஏற்படும் பதற்றம் தொடர்கிறது. இதுதொடர்பாக கொலை குற்றவாளி ஆகாஷ் தானே கொலை குற்றத்தை ஏற்றுக்கொண்டு காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் வீடியோவாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வருகிறது.

குற்றவாளியின் தந்தை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போன்றோர் இந்த கொலையை ஆகாஷ் செய்யவில்லை என்றும் இது அந்த மாணவியின் உறவினர்களால் செய்யப்பட்ட ஆணவ கொலையாக கூட இருக்கலாம் என்றும் கூறி வந்த நிலையில் கொலையாளி ஆகாஷே குற்றத்தை ஒப்பு கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளது அவர் தான் கொலையை செய்துள்ளார் என்பதை உறுதி செய்கிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “திலகவதி படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால், வெளியில் சென்றுவரும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?  தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், இவ்வழக்கில் ஆகாஷ் என்னும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாக காவல் துறையே வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. ஒருவேளை அவர் கொலை செய்திருக்கலாம். போலீசார் அந்த இளைஞரிடம் வாக்குமூலம் வாங்கியும் இருக்கலாம். அதை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்திருக்கனும். வாட்ஸ் அப்பில் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? நாளைக்கே அந்த இளைஞர் கட்டாயத்தின் பேரில்தான் வாக்குமூலம் பெற்றதாகக் கூறினால் போலீசால் என்ன செய்யும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்கள் இருவரும் விரும்பினார்கள் என்றும், மாணவியைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் தனது மகனுக்கு இல்லை என்றும் அந்த இளைஞரின் தந்தை புகார் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள், இப்படியான இரண்டு மாறுபட்ட கருத்துகள் வருவது பலத்த சந்தேகமாகவே உள்ளது. எங்களைப் பொறுத்தவரை மாணவி திலகவதியை யார் கொலை செய்திருந்தாலும், அவர்கள் எந்த சாதி, மதமாக இருந்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

குற்றத்தை கொலையாளியே ஒப்பு கொண்டு வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அரசியல் லாபத்திற்காக இவர் போன்றவர்கள் வழக்கை திசை திருப்பும் வகையில் பேசி குற்றவாளியை ஆதரிக்கலாமா? என்று பொது மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

author avatar
Parthipan K