என்னால்தான் தளபதி விஜய் அழுதார்

0
87

தமிழ் திரையுலகில் தற்போது அசைக்க முடியாத நட்சத்திரமாக இருந்து வருகிறார் தளபதி விஜய். ஆனால் இவர் அறிமுகமானபோது சந்திக்காத அவமானங்களே கிடையாது அதையும் தாண்டி தற்போது மாபெரும் சக்தியாக வளர்ந்து இருக்கிறார். விஜயின் கடைசி படமான பிகில் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது. அதனை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் மாஸ்டர் ஏப்ரல் மாதமே ரிலிஸ் ஆக வேண்டிய நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக தள்ளி போய்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் விஜயின் தங்கச்சியாக வேலாயுதம் படத்தில் நடித்த சரண்யா மோகன் அந்த படத்தில் நடந்த ஒரு விசியத்தை கூறியுள்ளார். நான் படத்தில் இறப்பதாக வரும் சீன்களில் விஜய் ரொம்ப எமோசனலாக அழுது இருப்பார் ஆனால் உண்மையாகவே அவர் தனது தங்கை திவ்யாவை நினைத்து  அழுதார் என சரண்யா மோகன் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K