தொடரும் தலித் இளைஞர்களின் அட்டூழியம் பலியாகும் அப்பாவி பெண்கள்

0
114

தொடரும் தலித் இளைஞர்களின் அட்டூழியம் பலியாகும் அப்பாவி பெண்கள்

நாடக காதலுக்கு சம்மதிக்காதா கல்லூரி மாணவி குறித்து தலித் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் பொது மக்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலியில் உள்ள குறவன் குப்பம் பகுதியைச் சேர்ந்தவரான ராதிகா கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அந்த மாணவியை குறித்து தவறான தகவலை அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற தலித் இளைஞர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனமுடைந்த மாணவி ராதிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்களும், கிராமத்தில் உள்ள பொது மக்களும் இந்த தற்கொலைக்கு காரணமான பிரேம்குமார் வீட்டை அடித்து உடைத்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பந்தபட்ட இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு கலவரம் ஏற்படும் அளவிற்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்த அவரது அத்தை மகன் விக்னேஷ் என்பவரும் ராதிகா இறந்த செய்தி கேட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம்கள் குறித்து பாதிக்கபட்டவர்களான விக்னேஷின் தந்தையும், ராதிகாவின் தந்தையும் தனித்தனியாக மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த நிலையில் தற்கொலைக்கு காரணமான அந்த இளைஞர் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாகியுள்ள பிரேம்குமாரை கைது செய்ய வேண்டும் என்றும், ராதிகா மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் இது குறித்து போலீஸ் பேச்சு வார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவி ராதிகா மற்றும் விக்னேஷ் உடல்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அங்கு கலவரம் ஏற்படும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் குறவன்குப்பம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் தன்னை காதலிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக திலகவதி என்ற மாணவியை தலித் இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்தார். கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் நோக்கில் தொடர்ந்து இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்து வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K