மக்களுக்கு சொன்னதை வழங்காததால் கலெக்டரின் பரிதாப நிலைமை!

0
80
Collector's miserable condition for not giving people what he said!
Collector's miserable condition for not giving people what he said!

மக்களுக்கு சொன்னதை வழங்காததால் கலெக்டரின் பரிதாப நிலைமை!

மதுரை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நிலம் கையகப்படுத்துவதில், உரிய இழப்பீடு வழங்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தரவுப்படி கலெக்டரின் கார் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் குடியிருப்பு கட்டுவதற்காக எல்லீஸ் நகர் பகுதியில் 99 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இதற்காக அறிவிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை குறைவாக இருப்பதாக கூறி 1984 ம் ஆண்டு மீண்டும் இதே வழக்கு தொடரப்பட்டது. கடந்த 37 ஆண்டுகளாக சென்னை ஐகோர்ட்டில் நடந்த இந்த வழக்கு, அதன் பின்னர் மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதன் காரணமாக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடாக  8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இழப்பீடு வழங்கவில்லை என்றால் கலெக்டரின் கார் மற்றும் கலெக்டரின் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவும் பிறப்பித்தது. அதன்படி இழப்பீடு தொகை வழங்கப் படாததால், மாவட்ட கலெக்டரின் இன்னோவா கார் ஜப்தி செய்யப்பட்டது. ஒரு வழக்கு முடிவுக்கு வர எவ்வளவு நாள் பொறுமை காக்க வேண்டி உள்ளது பாருங்கள்.இந்த நிலைமை முதலில் மாற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here