தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தால் மகிழ்ச்சி

0
83

தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தில் மகிழ்ச்சி

தென்னையிலிருந்து சர்க்கரை மற்றும் தேனை எடுத்து கடலூர் மாவட்ட விவசாயிகள் அசத்தி வருகின்றனர்,

மதுவிலக்கு கொள்கையில் சில மாற்றங்களை செய்து தமிழக அரசு தென்னை மரத்திலிருந்து நீராபானம் எடுக்கலாம் என்று விதிமுறையை தளர்த்தியது.

இதனைத்தொடர்ந்து தென்னை விவசாயிகள் நீராபானம் எடுத்து வணிகரீதியாக விற்பனைக்கு விற்பனை செய்து வருகின்றனர், நீராபானம் கள்ளாக மாறாமல் இருக்க தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு விவசாய அலுவலர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு வணிகரீதியாக லாபத்தை கொடுக்கும் வகையில் சென்னையிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் முறை மற்றும் தேன் எடுக்கும் முறையை கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்து வருகின்றனர்,. இதன்மூலம் கூடுதலாக தென்னை மரத்திலிருந்து லாபம் பார்க்கலாம் என்று விவசாயத்துறை அலுவலர்கள் கூறிவருகின்றனர்,.

நீராபானம் எடுக்க தனி நபர் ஒருவருக்கு மட்டும் அனுமதி கிடைக்காது, சுமார் 250 தென்னை விவசாயிகள் ஒன்றிணைந்து தான் நீராபானம் எடுப்பதற்கான உரிமையை பெற முடியும் அதுவும் மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில்தான் கொடுக்கப்படும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்,.

கடலூர் மாவட்ட விவசாயிகள் இதில் வெற்றி பெற்றால் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி மாநிலம் முழுவதும் தென்னையிலிருந்து சர்க்கரை மற்றும் தேன் உற்பத்தி செய்ய ஊக்கம் அளிக்கப்படும் என்று விவசாய மற்றும் தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

author avatar
Parthipan K