சென்னை வண்டலூரில் பசுமை தமிழகம் இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
81

தமிழக வனத்துறையின் சார்பாக இயற்கை வளங்களை காக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் பசுமை இயக்கம் தொடக்க விழா இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடந்தது.

இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கொண்டு பசுமை தமிழகம் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மேலும் அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரையாற்றினார்.

தமிழகத்தில் 23.8 சதவீதமாக இருக்கின்ற காடுகளின் பரப்பளவு 10 வருடங்களில் 33 சதவீதமாக அதிகரிக்க இந்த பசுமை தமிழகம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மக்களின் பங்களிப்புடன் இயற்கை வளங்களை காப்பதற்கு இன்று திட்டத்தை அரசு ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 2.8 கோடி மரங்களை நடுவதற்கு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

விழாவில் பங்கேற்பதற்காக வண்டலூருக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

வண்டலூர் ரயில் நிலையம் எதிரில் மாவட்ட திமுக சார்பாக வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ. அன்பரசன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.