ஆபாச பட விவகாரம் திருச்சியை சேர்ந்த ஒருவர் கைது?

0
79

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த திருச்சி பாலக்கரை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்ஃபோன்ஸ்ஸை போலீஸார் கைது செய்தனர்.

நிலவன் ஆதவன் என்ற பெயர் கொண்ட கணக்கு மூலம் வீடியோக்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்த அவர் அந்த கணக்குகள் மூலம் சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படத்தை 15 முறை பகிர்ந்துள்ளார் இதற்காக கைது செய்யப்பட்ட 42 வயதான ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் கிறிஸ்டோபர் அல்ஃபோன்ஸை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்டார் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் அவர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார் குழந்தை ஆபாசப்படங்களை பார்த்தல் மற்றும் பகிர்ந்த குற்றத்திற்காக தமிழகத்தில் முதல் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இதுபோன்ற குழந்தை ஆபாச படங்களை பகிர்ந்த நபர்களின் விவரங்கள் காவல்துறை வசம் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கான பேர் அந்த பட்டியலில் இருப்பதால் அடுத்தடுத்து கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் கணக்கில் நண்பர்களாக உள்ள 150 பேர் இப்படங்களை பார்த்து பகிர்ந்துள்ளனர் ஆகவே அவர்களும் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

author avatar
CineDesk