தாலி கட்டும் முன்பே தாயான பெண்! குழந்தையை கொன்று நாடகமாடியது அம்பலம்..!!

0
93

தாலி கட்டும் முன்பே தாயான பெண்! குழந்தையை கொன்று நாடகமாடியது அம்பலம்..!!

விருதுநகர் மாவட்டம் திருமால் புதுப்பட்டியை சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் குழந்தை கடந்த 5 ஆம் தேதி மர்மமான முறையில் தண்ணீர் மூழ்கி இறந்து கிடந்தது. குழந்தையை தனது கணவர் அமல்ராஜ்தான் கொன்றார் என சுஷ்மிதா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் துரிதமான விசாரணையை தொடங்கினர். குழந்தை இறப்பு பற்றி அமல்ராஜ் குடும்பத்தினரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் சுஷ்மிதா குழந்தையை கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது, இச்சம்பவத்தை அறிந்த குடும்பத்தினர் மட்டுமல்லாது காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளிக் கூடத்தில் படித்த போது அமல்ராஜினுடன் பழக்கம் ஏற்பட்டு சுஷ்மிதா கர்ப்பமான காரணத்தால் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திவிட்டனர். இதையடுத்து இருவருக்கும் உடனடியாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தாலி கட்டும் போது சுஷ்மிதா 7 மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு பிறகு இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகிய சில மாதங்களிலே குழந்தை பிறந்ததால் அமல்ராஜிக்கு சந்தேகம் எழுந்தது.

மேலும், சுஷ்மிதா தனது உறவுக்காரர் ஒருவருடன் பழகிய சம்பவமும் அமல்ராஜ் காதுகளில் வந்து விழ, அவருடைய சந்தேகம் மேலும் வலுத்தது. இதன் விளைவாக அந்த குழந்தையை தொடாமல் புறக்கணித்து வந்தார். குழந்தையை கொன்றுவிடலாம் என்று கணவன் மனைவி இருவரும் திட்டம் தீட்டி, பாத்ரூம் பக்கெட்டில் நீரில் குழந்தையின் தலையை அமுக்கி கொன்றுள்ளனர்.

குழந்தை இறந்ததாக குடும்பமே நாடகமாடியது இறுதி விசாரணையில் துப்பு துலங்கியது. இந்த கொலைக்கு பிண்ணனியில் இவர்களின் குடும்பமே இருந்த காரணத்தால் மொத்த பேரையும் காவல்துறை கைது செய்தது. பச்சிளம் குழந்தையை கொல்ல இவர்களுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ என்று பலரும் கொந்தளித்து போயுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாக இந்தியாவில் பெருகி வருவது வேதனையான ஒன்று.

author avatar
Jayachandiran