புறநகர் ரயில் சேவைகளை இயக்க கோரி முதலமைச்சர் கடிதம்!

0
58

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டது. அதற்கு பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. 

தற்போது சில முக்கிய சிறப்பு ரயில்களை பண்டிகை காலத்தை முன்னிட்டு இயக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னையில் உள்ள புறநகர் ரயில் சேவைகளை இயக்கக் கோரியுள்ளார்.

அவ்வாறு இயக்கும் போது மக்கள் அதிக அளவில் பயன் அடைவர் என்றும்  பொருளாதாரத்தை சீரமைக்க இந்த செயல் உதவும் என்றும் பியூஷ் கோயலுக்கு தனது கடிதத்தின் மூலம் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது கடிதத்தில் கொரோனா நிலையை கட்டுப்படுத்தும் வகையிலும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியும் புறநகர் ரயில்களை சென்னையில் இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

author avatar
Parthipan K