பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

0
67

முதலமைச்சரின் சிறப்பு வரன்முறை அடுத்தும் திட்டத்தின்கீழ் திருக்கழுக்குன்றம் மாவட்டம் பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சார்ந்த 81 நபருக்கு ரூபாய் 1.52 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை 6️ நபர்களுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகள், 21 நபர்களுக்கு குடும்ப அட்டைகள், 18 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் 88 நபர்களுக்கு இருளர் சாதி சான்றிதழ்கள், 34 நபர்களுக்கு நரிக்குறவர் நலவாரிய அட்டைகள், 25 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகள், சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதற்காக செயற்கைமுறை ஆபரணங்கள், தயாரிப்பதற்கான பயிற்சி அளிப்பதற்கு 18 நபர்களுக்கு பயிற்சி ஆணைகள், முத்ரா திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ஒட்டுமொத்தமாக 12 லட்சம் கடனுதவி, சிறு தொழில் செய்வதற்கான வங்கி கடன் திட்டத்தின் கீழ் 33 நபர்களுக்கு பத்தாயிரம் வீதம் 3 லட்சத்து 30 ஆயிரம் கடன் உதவி, 25 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முன் பதிவு ஒப்புதல் மெட்ராஸ் அடோமிக் பவர் ஸ்டேஷன் நிறுவனத்தின் மூலமாக பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் புதிதாக அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு கூடுதலாக 2 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணை, அதோடு பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆணை, என்று ஒட்டுமொத்தமாக 282 நபர்களுக்கு ரூ 4.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருக்கின்றார்.

வீடுகளுக்குச் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்து உரையாற்றிய பயனாளிகள் பவானி மற்றும் அஸ்வினி உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலின் தங்களுடைய இல்லங்களுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தார்கள். அவர்களுடைய அழைப்பினை ஏற்றுக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடைய வீடுகளுக்கு நேரில் சென்று குடும்பத்தினரிடம் நலம் விசாரணை செய்தார்.

இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் நரிக்குறவர் மற்றும் இருளர் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அவர்களிடம் வசதிகள் தொடர்பாக கேட்டறிந்து கோரிக்கைகளை மனுவாக பெற்றுக்கொண்டார்.

ஸ்டாலின் மேலும் பல உறுதிகளை அவர்களுக்கு வழங்கியிருக்கிறார் அதாவது பூஞ்சேரி ஊராட்சி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், மற்றும் சாலை உள்ளிட்ட வசதிகளை முழுமையாக உண்டாக்கி அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்து இருக்கிறார்.

நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி செல்வம், சட்டசபை உறுப்பினர் பாலாஜி ,முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர், சதீஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி தலைவர் செம்பருத்தி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் இதய வர்மன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.

பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு பல அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் தெரிவித்திருப்பதாவது,

சமுதாயத்தில் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய ஒருவரையும் விடாது சுயமரியாதையையும், சமூக நீதியையும், காப்பதையே திராவிட இயக்கத்தின் பணி சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல வரிகளை அதை மீட்டுத் தருவதற்காக ஆட்சிப் பொறுப்பு என்பது மிகவும் முக்கியம் என தெரிவித்திருக்கிறார்.

அதனைத்தான் நடமாடும் கோவில் திருப்பணியை தான் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கின்றது என தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார். திராவிட இயக்கம் உருவாகி நூற்றாண்டுகளை கடந்து இருக்கலாம் ஆனால் காலமென்ற பெருவெளியில் நூறு ஆண்டு என்பது கைக்குழந்தையே என தெரிவித்திருக்கிறார்.