அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பொதுமக்களே முதலாளிகள்! மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

0
76

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற 3 நாட்கள் நடைபெறும் மாநாடு நேற்று ஆரம்பமானது.இது போன்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்குபெறும் மாநாடு நடை பெறுகிறது.

நேற்று முதன் முதலாக தொடங்கிய இந்த மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது சட்டம் ஒழுங்கில் எக்காரணத்தை முன்னிட்டும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன், சமூக விரோத சக்திகள், கூலிப்படைகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து 2வது நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களை தலைமைச் செயலாளர் இறையன்பு வரவேற்று உரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக்கூடிய திட்டங்கள் தொடர்பாக விவரத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த அரசு உதவித் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்வது தொடர்பாக எல்லோரும் தங்களுடைய கருத்துகளை ஒன்றிணைந்து தெரிவிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் எங்களுக்கும், உங்களுக்கும், அதாவது அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், பொதுமக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். ஆகவே ஒரு ரூபாய் செலவு செய்தாலும் கூட அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைய முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்ற வேண்டிய சிறப்பு திட்டங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பொருட்கள் கிடைக்கிறது அது மஞ்சளாக இருக்கலாம், இயற்கை வளங்களாக இருக்கலாம். அவற்றை எவ்வாறு விற்பனை செய்வது அரசுக்கு வருமானம் பெறுவது விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் சிறு தொழில் குறுந்தொழில் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும் விதத்தில் திட்டங்கள் தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

நேர்மையான நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம், என்பதை மனதில் கொண்டு நீங்கள் ஆலோசனையை சுதந்திரமாக தெரிவிக்கலாம். அந்த விதத்தில் மாவட்ட ஆட்சியாளர்களின் கருத்துக்களை கேட்பதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

அதோடு இன்று மாலையும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கூட்டம் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது நாளைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், வன அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்குபெறும் கூட்டம் நடைபெறுகின்றது.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றுகிறார். மாவட்டங்களில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.