வல்லரசு நாடுகளைவிட தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக முதல்வர் பெருமிதம்!

0
69

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33.31கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அதன்பிறகு கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெரும் வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர திணறி வரும் நிலையில் தமிழகத்தில் நோய் தடுப்பு பணிகள் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா ஆய்வுக்கு தரமான சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகளில் அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள்,அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாத் தொற்று பாதித்த பகுதிகளில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் நேரடி பரிசோதனை செய்து அவர்களுக்கு தரமான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் தற்போது கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் போதிய அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது என்றும்,மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் 4.5 கோடி முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

author avatar
Pavithra