கண் தானம் செய்தார் முதல்வர் எடப்பாடி !!

0
61

கண் தானம் செய்தார் முதல்வர் எடப்பாடி !!

செப்டம்பர் 8-ஆம் தேதி தேசிய கண்தானம் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ஆம் தேதி தேசிய கண் தான தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசு கண் தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய கண் தான தினம் ஆண்டுக்கு ஒரு முறை கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் தேசிய கண்தானம் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் தன்னுடைய கண் தானம் செய்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முதல்வர் கண் தானம் செய்ய ஒப்புதல் அளித்து கண்தான படிவத்தில் கையெழுத்திட்டுள்ளர். மேலும் கண்தானத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு முயற்சி நடவடிக்கையாக இதை முதலமைச்சர்  செய்துள்ளர்.

author avatar
Parthipan K