சென்னை புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் !!

0
47

சென்னை புறநகர் பகுதியில் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே துறை டிஐஜி அருள்ஜோதி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2 மாதமாக ஊரடங்கில் பல்வேறு தரவுகள் அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயக்கம், சிறப்பு ரயில்கள் இயக்கம் போன்றவற்றை பழைய நிலைமைக்கு மீண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை புறநகர் ரயில் சேவையானது இல்லாதது பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.

புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்கப்படும் என்று பேசி தெரிவித்ததோடு ,ரயிலில் பயணிக்கும் போது பயனாளர்களுக்கு கொரோனா பாதிக்காமலிருக்க பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விரைவில் சென்னை புறநகர் பகுதியில் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும், அனேகமாக அக்டோபர் மாதம் முதல் சென்னையில் புறநகர் சேவை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிஐஜி தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K