வனப்பகுதியில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க விடக்கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி!

0
83
Chennai High Court
Chennai High Court

வனப்பகுதி நிலத்தை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க விடக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் சொகுசு விடுதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக மாவட்ட வனத்துறை அதிகாரி, கூடுதல் முதன்மை வனப்பாது காவலரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என அவர் கூறியிருந்தார். எனவே, வனப்பகுதியில் கட்டுமான பொருட் கள் வைக்க தடை விதிக்க வேண்டும் எனவும், வனப்பகுதியில் அமைக்கப் பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், மரங்கள் வெட்டப்பட்டு, இயற்கை எழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பறவைகள் மாயமாகி வருவதாகவும், நீரோடைகள் தடுக்கப்படுவதால் நிலச்சரிவுகள் ஏற்படுவதாகவும் மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீலகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் எனவும், இது தொடர்பாக  வனத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிர மிக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வனப்பகுதியில் இருந்து தனியார் சொகுசு விடுதிகளுக்கு தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.