அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு! அதிர்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

0
71

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகம் முழுவதும் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்து இருக்கின்றன.இந்த நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என் ஆர் தனபாலன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில் ரவுடிகள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கூட்டத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கின்ற சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை எம்கேபி.நகரில் அவர் பிரச்சாரம் செய்த சமயத்தில் அவரை தாக்கும் விதமாக ரவுடி ஒருவன் அவரை கத்தியால் வெட்ட வந்து இருக்கின்றான். அந்த சமயத்தில் அந்த ரவுடியை தடுக்கும் விதமாக அதிமுக நிர்வாகி சிவகுமார் செயல்பட்டபோது அவருக்கு அரிவாள் வெட்டு பட்டு இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து வேட்பாளர் என் ஆர் தனபாலன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் போன்றோர் எம்கேபி அதோடு அந்த ரவுடியை தடுத்த சிவகுமாருக்கு காயம்பட்ட அதிமுகவை சார்ந்த சிவக்குமாரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதோடு துணை ராணுவப்படை பாதுகாப்பும் எல்லா இடங்களிலும் விரிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதை எல்லாம் மீறி ஒரு கட்சியின் வேட்பாளரை தாக்கும் அளவிற்கு ஒரு ரவுடி செயல்பட்டதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.