முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி நடவடிக்கை!!

0
135
#image_title
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி நடவடிக்கை!
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கே பி அன்பழகன் இருவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாககயுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி அன்பழகன் மீதும், விஜயபாஸ்கர் மீதும் தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்புதுறை இந்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் சுகாதாரத்துறை  அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து விஜயபாஸ்கர் அவர்களுக்கு சொந்தமான 56 இடங்களில் சோதனை நடித்தி 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது.
அதிமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகன் அவர்களின் மீதும் வருமானத்திற்கு அதிகமாக 45.20 கோடி ரூபாய் சொத்து சேர்க்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் கே.பி அன்பழகன் மீதும் அவரது மனைவி மீதும் இரண்டு மகன்கள் உள்பட 11 பேர் மீது 10000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்தது.
author avatar
Savitha