விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் விதிமுறையில் மாற்றம் !

0
74

உலக நாடுகளில் கொரோனா தொற்று பெருகிவரும் நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

விமானத்தில் பயணம் செய்வோருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் விமானத்தில் பயணம் செய்வோருக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவில் விமானத்துறை அதிகாரிகள் கூறியதாவது,விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இல்லை என்ற சுய அரிவிப்பு கொடுக்கும் விதிமுறை மாற்றப்பட்டு இரண்டு மாதங்கள் என்ற கால அளவானது 3 வாரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் படிவத்தில் விமான பயணிகள் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா தொற்று இல்லை என்ற சுய அறிவிப்பை தெரிவிக்கும் வகையில் படிவம் மாற்றி அமைக்கப்பட்டடுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.இந்த விதிமுறைகளின் கீழ் பயணம் செய்ய வருபவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தபோது கொடுத்த சான்றிதழை காட்டினால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K