சம்பளம் தர தேவையில்லை – ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மத்திய அரசின் முடிவு

0
67

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் இயங்கவில்லை. IT, BPO உள்ளிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வலை செய்ய பணித்து தொடர்ந்து இயங்கி வருகிறது.

மத்திய அரசு 2005-ம் ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி இந்நிலையில் ஊரடங்கால் பணிக்கு வர இயலாமல் இருந்தாலோ அல்லது நிறுவனமே இயங்காமலிருந்தாலும் தங்கள் ஊழியருக்கு சம்பளம் தர வேண்டும் என்றும், ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்தாலோ, தராமல் இருந்தாலோ அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதனை எதிர்த்து பல நிறுவனங்கள் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. நிறுவனம் இயங்காத போது எப்படி வருவாய் ஈட்ட முடியும். வருவாயே இல்லாத நிலையில் எப்படி சம்பளம் வழங்க இயலும் என்று நிறுவனங்கள் கேள்வி எழுப்பியிருந்தன. இது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்குப் பதிலளித்த மத்திய அரசு, தங்களது அந்த உத்தரவைத் திரும்பப் பெற்று கொள்வதாக தெரிவித்துள்ளது.

இதனால் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்வதோ, சம்பளம் கொடுக்காமல் இருப்பதை பற்றி சம்மந்தப்பட்ட நிறுவனங்களே முடிவு எடுத்து கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

மத்திய அரசின் இந்த நிலை ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
Parthipan K