மத்திய அரசின் கடனுதவி!! பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

0
195
#image_title

மத்திய அரசின் கடனுதவி!! பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

மத்திய அரசு ஆனது விவசாயிகள் என தொடங்கி அனைவருக்கும் பல நலத்திட்டங்களை வழங்கி வரும் நிலையில் பாரம்பரியத்தை மதிக்கும் வகையிலும் அதனை வளர்க்கும் பொருட்டு பாரம்பரிய கைவினையர்களுக்கு அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்வதற்காக பி எம் விஸ்வகர்மா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி இன்று காணொளியில் எடுத்துரைத்தார். அதில் அவர் கூறியதாவது, பாரம்பரிய கைவினையர்களுக்கு அவர்களை வளர்க்கும் வகையில் நலத்திட்ட உதவிகள் பலவற்றை திட்டத்தின் மூலம் செய்து கொடுக்கப்படும். மேலும் இத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு தேவையான கடனுதவி கிடைப்பதோடு மின்னனும் பண பரிவர்த்தனை உள்ளிட்டவைக்கு ஊக்கத்தொகை கொடுக்கப்படும். அத்தோடு திறன் மேம்பாட்டு பயிற்சி நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான அடுத்த கட்டத்திற்கு நகர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் தயாரிக்கும் பொருள்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாக வெளிநாடுகள் வரை இணைப்பை ஏற்படுத்த ஆதரவு வழங்கப்படும் என கூறினார். மேற்கொண்டு இத்திட்டத்தில் அவர்களுக்கு கிடைக்கும் உதவிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு பாரம்பரிய கைவினையர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். தற்பொழுது பாரம்பரியம் என்று சொன்னாலே முற்றிலும் அழிந்து வரும் நிலையில் இவ்வாறான திட்டங்கள் அதனை வளர்க்க வழிவகுக்கும் என கூறுகின்றனர்.