நள்ளிரவில் ஜவுளி கடையில் திருட முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி வெளியீடு!!

0
139
#image_title

நள்ளிரவில் ஜவுளி கடையில் திருட முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி வெளியீடு!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஜவுளி மற்றும் செல்போன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொள்ளை சம்பவம் நடைபெற்றது அதில் சுமார் ஒன்றரை லட்சம் ரொக்க பணம் திருடு போனது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரவே மீண்டும் நள்ளிரவில் பூட்டை உடைத்து கொலை முயற்சி சம்பவம் நடைபெற்று உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஜவுளிக்கடை உரிமையாளர் ஆறுமுகம் வழக்கம்போல் தனது கடையை திறக்க வந்துள்ளார் அப்போது பூட்டு உடைந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துவிட்டு உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளை முயற்சி நடந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது அதில் நள்ளிரவில் முகமூடி அணிந்த இருவர் கேஷுவலாக ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.