மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்!! CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு?!!

0
71

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு 2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர்களுக்கான முடிவுகள் காத்திருக்கும் இந்த நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளை பள்ளிகள் இறுதி செய்வதற்கான கடைசி தேதியை மாற்றி உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாணவரின் காத்திருப்பு சூழல் இன்னும் அதிகமாகி உள்ளது.

மேலும் ஜூலை 21ல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் ஜூலை 22 ஆம் தேதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளை பள்ளிகளில் இறுதி செய்ய வேண்டும் என்று கல்வி வாரியம் பள்ளிகளுக்கு கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 21ம் தேதி ஈத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

ஆகையால் தேசிய விடுமுறை நாள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 21 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் காரணமாக ஜூன் 21 ஆம் தேதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிபிஎஸ்சியுடன் இணைந்து அனைத்து பள்ளிகளும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் இறுதி செய்வதில் மும்முரமாக ஆர்வம் காட்டி வருகின்றன.

மேலும் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் உறுதி செய்வதற்கு கடைசி நாள் ஜூலை 22 ஆகும் என்று சிபிஎஸ்இ ஒரு சுற்றறிக்கையை கூறியுள்ளது. சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் குறித்து சமீபத்திய செய்திகளை அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வமாக வலைதளமான cbse.nic.இந்த மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், சிபிஎஸ்சி 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் பின்வருவன:

சிபிஎஸ்சி அதிகாரப்பூர்வ வலைத் தளத்திற்கு செல்லவும்.
அதில் ரிசல்ட் என்பதை கிளிக் செய்யவும் ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் பக்கம் அதில் இருக்கும்.
மேலும்,பத்தாம் வகுப்பு முடிவுகளை தெரிந்து கொள்ள மேல்நிலைப்பள்ளி தேர்வு என்பதை தொட்டு கிளிக் செய்க.
மேலும், பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளை பெற சீனியர் மேல்நிலைப்பள்ளி தேர்வு என்ற ஐகானை கிளிக் செய்யவும்.
அதனை அடுத்து, உங்களது வரிசை எண், தேர்வு மைய எண், பள்ளி மற்றும் அட்மிட் கார்டு விவரங்களை சமர்ப்பித்து கிளிக் செய்து முடித்தவுடன் உங்களது தேர்வு முடிவுகள் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து வைக்கவும்.

சிபிஎஸ்இ 10, 12 வாரிய தேர்வு 2021 முடிவுகளை தயாரிப்பதற்கான முயற்சிகளில் பள்ளிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

author avatar
Jayachithra