வெண்புள்ளி நோய் வர காரணம்!! இது முற்றிலும் குணமாக வழி!!( 100 Result )

0
268
#image_title

வெண்புள்ளி நோய் வர காரணம்!! இது முற்றிலும் குணமாக வழி!!( 100 Result )

வெண்புள்ளி. விட்டிலிகோ என்று அழைக்கப்படும் இந்த பாதிப்பு மோசமானது என்று தான் சொல்ல வேண்டும். இந்த தன்னுடல் தாக்க நோயால் மற்றவர்களின் பார்வைக்கு பயந்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள். இது ஒருவித தொற்று நோய் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் விட்டிலோ என்னும் வெண்புள்ளி தொற்று அல்ல. இது ஒருவித குறைபாடு. இந்த விட்டிலிகோ நோய் தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

இந்த தொற்று வருவதற்கான காரணம் மெலனின் என்ற சுரப்பி சுரக்காமல் போவதினாலோ அல்லது குறைவாக சுரப்பதினாலோ வரலாம். இதனை சரி செய்வதற்கு முதலில் உணவு மூலமாக எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். உணவு மூலமாக என்றால் சமைக்காத உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை ஒருவேளை உணவாக சாப்பிட்டு வருவதன் மூலமாக மெலனின் அதிகரிக்க செய்யலாம்.

அதிக காரம், அதிக இனிப்பு, அதிக உப்பு,டீ , காபி போன்றவற்றை தவிர்ப்பதன் மூலமாக இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். சூரிய ஒளிப்படாமல் இருப்பதன் மூலமாகவும் இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நம் உடலுக்கு சூரிய ஒளி கட்டாயம் தேவைப்படுகிறது. ஆகையால் காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் சூரிய ஒளியை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் இந்த பிரச்சனை சரி செய்யலாம்.

மன அழுத்தத்தின் காரணமாகவும் வெண்புள்ளிகள் வரலாம். ஆகைய மன அழுத்தம் குறைவதற்கு தேவையான யோகா செய்து மன அழுத்தத்தை குறைப்பது மூலமாகவும் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

author avatar
Selvarani