விருதுநகரில் பட்டா விவசாய நிலத்தில் போடப்பட்ட சாலையை அகற்றக் கோரி வழக்கு!

0
103
#image_title

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த ரமேஷ், காரளம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், ” விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அரசகுளம் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

இங்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் எவ்விதமான அறிவுறுத்தலும் இன்றி, சாலை அமைத்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. இதனால் நாங்கள் மிகுந்த இழப்பிற்கு உள்ளோம். ஆகவே எங்களது விவசாய நிலத்தில் போடப்பட்ட சாலையை அகற்றவும், மூன்று லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, “பொதுமக்களின் நலனுக்காக சாலை அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறுவது நம்பும் வகையில் இல்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர், விவசாய சாலை எதற்காக  அமைக்கப்பட்டது? என்பது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆட்சிப் பணிகள் பொறுப்பில் இருக்கும் அலுவலர் உண்மையை இந்த நீதிமன்றத்தில் கூறுவார் என நீதிமன்றம் நம்புகிறது என குறிப்பிட்டு வழக்கு ஒத்திவைத்தனர்.

author avatar
Savitha