திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

0
51

திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு விசாரணையின் அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996 முதல் 2001 வரை நங்கநல்லூர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி அப்போது பதவி வகித்துள்ளார்.

அவர் பதவி வகித்த அந்த காலகட்டத்தில், வணிக வளாகம் கட்டியதற்காக சுமார் 7.64 லட்சம் முறைகேடு செய்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கூட்டுறவு சங்க சார்பதிவாளர் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக ஆர் எஸ் பாரதி மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் நிர்வாகிகளுக்கு 2004ஆம் ஆண்டு கூட்டுறவு சங்க துணை பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் வழக்கின் விசாரணை ஆறு மாத காலத்திற்குள் முடிக்கும்படி, நங்கநல்லூர் கூட்டுறவு சங்கத்தின் தற்போதைய தலைவர் பரணிதரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த், வெங்கடேஷ் ஆகிய இருவரும் இது தொடர்பாக, செங்கல்பட்டு கூட்டுறவு சங்க துணை பதிவாளர் 8 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை அக்டோபர் 10க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

author avatar
Parthipan K